2002 கோத்ரா வன்முறை வழக்கு: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது குஜராத் ஐகோர்ட்
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதில், மெக்சானா மாவட்டம் மெடா அட்ராஜ் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தந்தை- மகள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் கடந்த மாதம் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதிகள் ஆனந்த் தவே மற்றும் கரியா ஆகியோர் கொண்ட டிவிசன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட 27 பேரையும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெக்சானா விரைவு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.