அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன் தலைமையில் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு; ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மம் பற்றி விசாரிக்க வலியுத்தல்.
மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 12 பேர் இன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி மத்திய அரசு சார்பில் விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். தற்போதைய தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கையை ஏற்காது. எனவே, ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்துள்ளோம். இதில், நியாயமான விசாரணை நடந்து உண்மைகள் வெளியே வரவேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள், குளறுபடிகள் உள்ளன. நீர்ச்சத்து குறைவுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக செங்கோட்டையன் பொய் கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.