குஜராத்தை தொடர்ந்து பீகாரிலும் தலித் வாலிபர்கள் மீது தாக்குதல்
குஜராத்தில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக தலித் வாலிபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு மறைவதற்குள், பீகாரிலும் 2 தலித் வாலிபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பபுடோலா பகுதியை சேர்ந்த தலித் வாலிபர்களான முன்னாவும், ராஷீவும் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியதாக அப்பகுதி பஞ்சாயத்து தலைவரின் அடியாட்களால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் வாலிபர்கள் இருவரையும் ஒரு அறையில் பூட்டி வைத்து மூங்கில் கம்புகளால் அவர்கள் அடித்து, உதைத்தனர். அத்துடன் நிறுத்தாமல் 2 வாலிபர்களின் வாயிலும் அவர்கள் சிறுநீர் கழித்ததாகவும் தெரிகிறது.
கடந்த 20-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பாரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.