சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சி பிரச்சினையாக பார்க்க கூடாது: தம்பித்துரை
அ.தி.மு.க. இணைப்பு குறித்து துணை சபா நாயகர் தம்பிதுரை டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கட்சி தொண்டன் என்ற முறையில் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். மக்கள் வாக்களித்த இரட்டை இலையை மீட்க முயற்சித்து வருகிறோம்.
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நானும், எதிர்தரப்பினரும் இரட்டை இலையை காப்பாற்றுவது தான் எங்கள் கடமை என நினைக்கிறோம்.
அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் இல்லை. இணைப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இரு அணிகள் ஒரே நாளில் கூட இணைய வாய்ப்பு உள்ளது. ஓ.பி.எஸ். முதல்வராவது குறித்து கேள்வி எதுவும் எழவில்லை.
அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.
சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சி பிரச்சினையுடன் சேர்த்து பார்க்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.