ஒரு கோடி இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன்கள் வழங்க அதிமுக திட்டம்- அன்புமணி குற்றச்சாட்டு.
இதுபற்றி பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறியதாவது ; “நான் சேலம் மறை மாவட்ட பேராயரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது அவர் இலவச கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில், வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும்.
ஏழை மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் குறித்தும் என்னிடம் கூறினார். முக்கிய பிரச்சினையான ஊழல் மற்றும் மதுவை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
18 ஆயிரம் ஜோடி செருப்புகள் சேலத்திற்கு வந்துள்ளது. இது தேர்தல் விதிமுறைகள் மீறிய செயலாகும். இது குறித்து நாங்கள் சென்னை மற்றும் டெல்லியில் செயல்பட்டும் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.
சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த கால நிகழ்வுகளை திருத்தி கொள்ள வேண்டும். அம்மா உத்தரவின் பேரில் மழை பெய்தது என்று கூறிய கலெக்டர் தேர்தல் நேரத்தில் நடுநிலையோடு செயல்படவேண்டும்.
இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து அவரை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
ஒரு கோடி இளைஞர்களுக்கு சுமார்ட் போன் வழங்க அ.தி.மு.க. திட்டம் போட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதற்காக அந்த தனியார் நிறுவனங்களுக்கு முன்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து எந்த நிறுவனத்திற்கு முன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.