பஞ்சாப் முதல்வராகிறார் அமரீந்தர் சிங். ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாகிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் முதல்மந்திரி வேட்பாளராக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட கேப்டன் அம்ரீந்தர் சிங், முறைப்படி சட்டசபை காங்கிரஸ் தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ-க்களால் இன்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, வரும் 14-ம் தேதி கங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்திக்க இருக்கும் அம்ரீந்தர் சிங், அமைச்சரவையில் யார்? இடம்பெறுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் , 16-ம் தேதி பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் முதல்மந்திரியாக அம்ரீந்தர் சிங் மற்றும் அவரது அமைச்சரவையினர் பதவியேற்க உள்ளனர். காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியானது பஞ்சாப் சட்டசபையின் எதிர்க்கட்சியாக அமர உள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.