குழப்பம் நீங்கியது; தர்மபுரி பென்னாகரம் தொகுதியிலிருந்து அன்பு மணி போட்டி.
ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அதனை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதா என்ற குழப்பம் அன்புமணிக்கும் பா.ம.க தலைமைக்கும் ஏற்பட்டிருந்தது. அதனால் தேர்தலில் நிற்காமல் பிரச்சாரம் மட்டும் செய்துவிட்டு தேர்தலில் பா.ம.க வெற்றிபெற்றால் அப்போது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்துக்கு நிற்கலாம் என்றுகூட யோசிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு அந்த வேட்பாளரே களத்தில் இல்லையென்றால் மக்களுக்கு நம்பிக்கை வராது என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு தற்சமயம் பென்னாகரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
பாமகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியானது. தொண்ணூறு வேட்பாளர்கள் உள்ளனர். அதில் முதல் பெயரே அன்புமணியின் பெயராகத்தான் உள்ளது. கட்சியின் தலைவரான ஜி.கே.மணியும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். அவருக்கு மேட்டூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.