பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சின்போது தூங்கிவழிந்த கேஜ்ரிவால்.
டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழா உரையாற்றியபோது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்தியாவின் 70-ம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின விழா உரையாற்றியபோது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. வி.ஐ.பி.க்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ’தூங்கும் அளவுக்கு பிரதமரின் பேச்சு ”போர்” அடித்திருக்கக்கூடும்” என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.