‘சிங்கம் 3’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக தாகூர் அனுப் சிங் நடித்து வருகிறார்.
’24’ படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிங்கம் 3’. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னையில் சில முக்கிய காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு. இறுதியாக மலேசியாவில் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
‘சிங்கம் 3’ படத்தின் வில்லன் யார் என்பது தெரியாமல் இருந்தது. இப்படத்தில் தாகூர் அனுப் சிங் (THAKUR ANOOP SINGH) வில்லனாக நடித்து வருகிறார். அவரும், சூர்யாவும் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளைத் தான் சென்னையில் படமாக்கி வருகிறது படக்குழு. இவர் பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை சுமார் ரூ.41 கோடிக்கு விலை போயிருக்கிறது. இதனை உதயம் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.