மந்திரிசபை மாற்றம் என்பது மோடி நடத்தும் நாடகம் – மாயாவதி குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டது. இதில் 19 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். ஏற்கனவே பதவி வகித்து வந்த 5 மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளநிலையில் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
“நரேந்திர மோடி தலைமயிலான மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்து ஒரு நாடகம். குறிப்பாக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தலுக்காக செய்யப்பட்ட மாற்றம் இது. முந்தைய காங்கிரஸ் அரசு கையாண்ட அதே உத்தியைதான் பா.ஜ.க பின்பற்றுகிறது” என கூறியுள்ளார்.
–அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.