இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நடைமுறையில் சட்ட விதிமுறைகள் மீறியதாகவும், இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே இதில் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை சமீபத்தில் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.