பிரதமர் நரேந்திர மோடியுடன் கல்லூரியில் படித்ததாக யாரேனும் நிரூபித்தால் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சாய் கி சர்சா (chai ki charcha) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசிய திக்விஜய் சிங், பள்ளி கல்வியை முடித்துவிட்டு, பல்கலைக்கழக நுழைவுக்கு தயாராக இருந்ததாக முன்னர் கூறிவந்த நரேந்திர மோடி, இப்போது பட்டதாரி என கூறுவது வியப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் மோடியுடன் சேர்ந்து படித்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால், கண்டிப்பாக அவருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரை சேர்ந்த சீனிவாஸ் சன்னப்பா என்பவரும் மோடியுடன் பள்ளி அல்லது கல்லூரியில் படித்ததாக யாராவது நிரூபித்தால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூர் பத்திரிகையாளர் சங்கத்தில் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.