டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் முன்னேற்றம். ஆம் ஆத்மி – 5 இடங்கள், காங்கிரஸ் -4 இடங்கள்.
டெல்லி மாநகராட்சியின் 13 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
காலியாக இருந்த தெற்கு மாநகராட்சியில் 7 வார்டுகள், வடக்கு மாநகராட்சியில் 4, கிழக்கு மாநகராட்சியில் 2 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் அபார வெற்றிபெற்றிருந்தது. அதனால், டெல்லி மாநகராட்சிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை மீண்டும் ஆம் ஆத்மி கட்சி பின்னுக்குத் தள்ளுமா என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை வகித்தது.
இறுதியில், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.