விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்: மும்பை கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு
நாடறிந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் மார்ச் மாதம் 2-ந் தேதி இங்கிலாந்துக்கு தப்பி விட்டார். இந்தியாவுக்கு திரும்பி வந்து, அவர் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார்.
அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனம் செய்யுமாறு கேட்டு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட தனிக்கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை அந்த கோர்ட்டு நாளை மறுதினம் (13-ந் தேதி) பிறப்பிக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.