சொத்துக் குவிப்பு வழக்கு; தள்ளிப்போடச்சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை வருகிற 23–ந்தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் மேல் முறையீட்டு மனுவின் விசாரணையை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.