திமுகவுக்கு திரைப்பட நட்சத்திரங்களின் பிரச்சாரம் தேவையில்லை- ஸ்டாலின் பேட்டி.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் முன்பு மீனப்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:–
கே:– 3–ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டீர்கள். மக்கள் ஆதரவு எப்படி உள்ளது?
ப:– ஆட்சி மாற்றம் வேண் டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே 234 தொகுதிகளிலும் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும்.
கே:– மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமுல் படுத்த முடியும் என்றும் ஒரே கையெழுத்தில் மது விலக்கை கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?
ப:– மிடாஸ் மது ஆலைக்காக அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.
கே:– அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பிரசாரம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு தி.மு.க.வில் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் இல்லையே?
ப:– அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி தேவையில்லை.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே தமிழக மக்கள் இதற்கு நல்ல முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்திற்காக கோவை சென்ற மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தஞ்சாவூர் பொதுக் கூட்டத் தில் பேசும் போது எனக்கு 90 வயதை கடந்து விட்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 100 வயதை கடந்தும் பொது மக்களுக்காக பாடுபட விரும்புகிறேன் என்று கூறியுள்ளாரே? என்று கேட்டனர்.
அதற்கு மு.க.ஸ்டாலின், அது கலைஞரின் மன வலிமையையும், இனிமையான எண்ணங்களையும் காட்டுகிறது என்று பதில் அளித்தார்
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.