அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்; சந்தர்ப்பம் உங்களை உச்சிக்குத் தூக்கிச் செல்லும் – ரசிகர்களிடம் சூர்யா பேச்சு.
, “’24’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து தொடர்ச்சியாக கைதட்டினார்கள். அதற்காக தான் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம். மற்ற நாயகர்கள் மாதிரி நான் இல்லை. ரசிகர்களைப் பார்த்தே 2 வருடங்களுக்கு மேல் இருக்கும். உங்களை எல்லாம் நான் தனியாக சந்திப்பதே இல்லை. நடித்த 3 படங்களுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதால் சென்னையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்று எனக்கு பெரிய குற்ற உணர்ச்சி இருக்கிறது.
என் அப்பா இதற்கு முன்பு எந்த ஒரு மேடையிலும் இப்படி பேசியதில்லை. முதல் முறையாக அப்பா இப்படி பேசிப் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக தான் பார்க்கிறேன். அவருடைய அழகான வார்த்தைகளுக்கு அடையாளம் கொடுத்தது, வழிகாட்டியது எல்லாமே ரசிகர்கள் தான். இந்த காலகட்டத்தில் என்னை ஒரு நடிகனாக்கி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சரியான படம் பண்ணினால் மட்டும் ஜெயிக்க வையுங்கள். தப்பான படம் நான் பண்ணினாலும் ஜெயிக்க வைக்காதீர்கள். அப்போது தான் நான் இன்னும் நல்ல படங்கள் கொடுக்க முடியும். இன்னும் நல்ல கதைகள் தேடி ஒட முடியும். நல்ல படங்களை மட்டும் ஜெயிக்க வையுங்கள், பரவாயில்லை.
பாட்டில்கள் இருந்தன. அம்மாவும் பின்னாடியே வந்தார்கள். குழந்தையைப் போய் எடுத்துக் கொள் என்றார்கள். ஆனால் குழந்தை எடுக்கவே இல்லை. கடைக்காரரும் சொல்கிறார் ஆனால் அக்குழந்தை எடுக்கவில்லை. இறுதியாக கடைக்காரர் தன்னுடைய கையால் நிறைய சாக்லெட் கொடுத்தவுடன் அக்குழந்தை தன்னுடைய சட்டையில் வாங்கிக் கொண்டது.
அந்த அம்மா “என்ன நீ.. நான் தான் எடுத்துக்கோனு சொல்றேன்ல. பிறகு ஏன் எடுக்கவில்லை? ” ஒரு சின்ன குழந்தை கடைக்குள் சென்றது. அக்கடையில் நிறைய சாக்லெட், கேண்டீஸ் உள்ள என்று குழந்தையிடம் கேட்டார்கள். உடனே அக்குழந்தை “என்னுடைய கை ரொம்ப சிறியது, அந்த கடைக்காரர் கை ரொம்ப பெரியது. அவர் எடுத்துக் கொடுத்தால் நிறைய வரும். அதனால் தான் நான் எடுக்கவில்லை” என்றது. அதே போல தான் நாம் கடவுளிடம் கேட்டால் ரொம்ப சின்னதாக கேட்டு விடுவோம். ஆனால் கடவுளாக கொடுத்தால் பெரியதாக கொடுத்தார். அதே போல தான் ரஹ்மான் சாரிடம் போய் இசை எல்லாம் கேட்க முடியாது. நாம் கேட்பதை விட அவர் நிறைய கொடுப்பார். இந்த படத்துக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார்.
நான் ஒரு தற்குறி, அதனால் தான் என்னைச் சுற்றி எப்போதுமே அறிவாளிகளை வைத்து கொள்ள முயற்சி செய்வேன். ரஹ்மான் சாரிடம் சேட் மசாலா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் பேசலாம். நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
ரசிகர்கள் எங்களுடைய வளர்ச்சியின் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள். காலையில் இருந்து நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். அனைவருக்குமே ஒரு நேரம் கிடைக்கும் போது நாம் நம்மை நிரூபித்துக் கொள்ளலாம். அப்துல் கலாம் பேப்பர் போடும் பையனாக இருந்து ஜனாதிபதியானார். அவர் தன்னுடைய நேரத்தை அழகாக தனது ஆக்கிக் கொண்டார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கேள்வித்தாளைப் பார்த்துவிட்டே 20 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளாதீர்கள். மனது வலிக்கிறது. படிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். இன்னும் மதிப்பெண் கூட வரவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கிறது. பெருமையாக இருங்கள். சும்மா எல்லாம் ஒருவரை படைக்கவில்லை. அவசரப்படாதீர்கள். நான் எல்லாம் ஒரு டம்மி பீஸ். கல்லூரி முடிக்கும் வரை எனக்கு ஒன்றுமே தெரியாது. வேறு மாதிரி எனக்கொரு வாழ்க்கை அமைந்தது. வாழ்க்கை என்பது பேப்பர் கிடையாது, கட் பண்ணுவதற்கு. ” என்று சூர்யா பேசினார்
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.