டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கூடாது –உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனு.
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக பணியாற்றிய போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் அவர் இந்த முடிவை எடுத்ததாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரி அவரது தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1-ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
‘சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவில் தெளிவான காரணங்கள் இல்லை’ இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.