திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி ; இளங்கோவன் அறிவிப்பு.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது–
காங்கிரசின் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் நாளை சென்னை வருகிறார். பாண்டிச்சேரி செல்லும் அவர் வருகிற 13–ந்தேதி சென்னை வருகிறார்.
அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். அப்போது தி.மு.க. காங்கிரஸ் கட்சி கூட்டணி பற்றி முடிவு தெரியும்.
தே.மு.தி.க. எங்கள் கூட்டணியுடன் சேருமா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது. இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தால் பிறகு தெரியப்படுத்தப்படும்.
காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பின்னால் சென்ற காங்கிரஸ் கட்சி இப்போது நடிகை குஷ்புவின் பின்னால் போகிறது என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.
இப்போது முதல் அமைச்சராக இருக்கும் ஜெயலலிதா மற்றும் பல நடிகைகள் கூட கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். எனவே குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.