கருணாநிதியை இழிவு படுத்திய வைகோவின் பேச்சு; வைகோவுக்குத் தேர்தல் கமிஷன் நோட்டீஸ்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இது தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வைகோவின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கருணாநிதியை விமர்சித்தது தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவிற்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்தது குறித்து பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது தனிநபரை விமர்சனம் செய்தது தவறு என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.