டெல்லி அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி அனுமதி மறுப்பு. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவி தப்புமா?
கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களை ஆட்சி மன்ற செயலாளர் என்ற பதவியில் நியமித்தார். அந்த பதவியை ஆதாயம் தரும் பதவி பட்டியலில் இருந்து நீக்கக்கோரும் மசோதாவையும் அவரது அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு தனது கருத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.
அதே சமயத்தில், மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும், ஆதாய பதவி வகிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்குமாறும் ஜனாதிபதியிடம் பல்வேறு கட்சியினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார். மேலும், 21 எம்.எல்.ஏ.க்களிடமும் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. இதனால், அவர்களது பதவி என்னாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.