டெல்லி பெண் புகாரின் பேரில் உத்தரகாண்ட் முன்னாள் மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா அரசிலும், அதைத் தொடர்ந்து ஹரிஷ் ராவத் அரசிலும் விவசாய மந்திரியாக இருந்தவர், ஹராக் சிங் ராவத் (வயது 55). இவர் முன்னாள் முதல்-மந்திரி விஜய் பகுகுணாவுடன் காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்து ஹரிஷ் ராவத் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அங்கு ஹரிஷ் ராவத் அரசு மீண்டும் அமைந்தபோது, ஹராக் சிங் ராவத், பாரதீய ஜனதாவில் சேர்ந்து விட்டார்.
இந்த நிலையில் அவர் தெற்கு டெல்லியில் கிரீன்பார்க்கில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 32 வயது பெண் ஒருவரை வரவழைத்து, கற்பழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்த அந்த பெண்ணின் புகாரின் பேரில், ஹராக் சிங் ராவத் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
டெல்லியில் 2014-ம் ஆண்டு, ஹராக் சிங் ராவத், தன்னிடம் வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.
இப்போது அவர் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ள பெண், 10 ஆண்டுகளுக்கு முன்பு “எனது குழந்தைக்கு ஹராக் சிங் ராவத்தான் தந்தை” என கூறியதாகவும், இதனால் மந்திரி பதவியை விட்டு அவர் விலகி சி.பி.ஐ. விசாரணையை சந்தித்து, குற்றமற்றவர் என நிரூபித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.