சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள் –ஜெ.தீபா.
எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை பொருளாளர் ஜெ. தீபா இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் ஆதரவு தந்து என்னை வெற்றி பெற வைப்பார்கள். இதுவரை யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. தி.மு.க. மற்றும் சசிகலா குடும்பத்தை தவிர மற்றவர்கள் ஆதரவு தர விரும்பினால், அதை ஏற்றுக் கொள்வேன்.
நான் அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதா மரணம் குறித்து பேசவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்ப உள்ளேன். எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையை ஏற்க முடியாது. மருத்துவ அறிக்கையில் எந்த உண்மையும் வெளிவரவில்லை.
சசிகலா குடும்பம் ஆர்.கே. நகரில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள். சசிகலா தலைமையிலான இயக்கத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்’’ என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.