சிவ்பால் யாதவ் விலகினால் சமாஜ்வாடி கட்சி உடையும்: முலாயம்சிங் யாதவ் எச்சரிக்கை
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. முலாயம்சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவ் மந்திரியாக உள்ளார். அவர் மீது அதிகமான லஞ்ச புகார்கள் வருவதால் அவரை ராஜினாமா செய்யும்படி மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியானது.
இதுபற்றி நேற்று நடந்த சுதந்திரதின விழாவில் முலாயம்சிங் பேசும்போது, “சிவ்பாலுக்கு எதிராக கட்சியில் சதி நடக்கிறது. அவர் கட்சியை விட்டுச் சென்றால் கட்சி உடைந்துவிடும். அவர் கடினமாக உழைக்கிறார். ஒரு சிலர் அவருக்கு எதிராக உள்ளனர். அவர் விலகினால் கட்சி மோசமான நிலையை சந்திக்கும். பாதி பேர் அவருடன் சென்றுவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.
அந்த விழாவில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.