ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்த வாலிபர் பார்லிமெண்ட் எதிரே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.
மத்தியப் பிரதேசத்தை உள்ள சிவபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம் தயாள் வர்மா (வயது 38) என்பவர் நீண்ட நாட்களாக சூதாட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். தற்போது பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளிலும் ராம் தயாள் சூதாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் நினைத்தது போல் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மாறாக தன்னுடைய சொத்து, வாழ்நாள் சேமிப்பு உட்பட அனைத்தையும் இழந்துள்ளார். இது தவிர பலரிடம் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். சூதாட்டத்தில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை தொடர்ந்து நேற்று இரவு தனது சொந்த ஊரில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.
இன்று காலை டெல்லி வந்த ராம் தயாள், பாராளுமன்றம் அருகில் இருக்கும் பெரிய மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரின் உடலுக்கு அருகில் 23 பக்க தற்கொலை கடிதமும், மற்ற சில ஆவணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ராம் தயாள் வர்மாவின் தற்கொலை குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.