ஐ.பி.எல்: குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் மிகவும் பலம் வாய்ந்த இந்த இரு அணிகளான டெல்லியும், குஜராத் அணியும் மோதிய போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணிக் கேப்டன் ஜாகீர் கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். குஜராத்தின் முக்கிய பலமே அதன் தொடக்க ஆட்டகாரர்கள் தான். ஆனால் இன்றைய போட்டியில் சுமித்தும்(15), மெக்கல்லமும்(1) விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பின்ச் 5 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதன் பிறகு களமிறங்கிய ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியை அமித் மிஸ்ரா பிரித்தார். 24 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ஸ்டெம்பிட் முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய கார்திக் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜடேஜா(36) அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் நதீம் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியின் இளம் தொடக்க வீரர்களான டி காக்கும், ரிஷாபத் பந்த்தும் அந்த அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள்.
முக்கியமாக பந்த் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்கள் குவித்தது. பந்த் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். டி காக் 45 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாம்சன் 19 ரன்களுடனும், டும்னி 13 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். ஆட்டநாயகனாக பந்த் தேர்வு செய்யப்பட்டார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.