நிகழ்ச்சித் தொகுப்பாளராக கமல்?- முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் பேச்சுவார்த்தை
முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தங்களுடைய நிறுவனத்துக்கு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குவது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கமல் இயக்கி, தயாரித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இதனை முதல்பிரதி அடிப்படையில் லைகா நிறுவனமும் கமலோடு இணைந்து தயாரித்து வருகிறது. அமெரிக்காவில் முதற்கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு சென்னை திரும்பியது படக்குழு.
சென்னை திரும்பியவுடன் அலுவலகத்தில் கீழே விழுந்ததால், கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களும் ஒய்வு எடுக்க அறிவுறுத்தியதால், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தடைப்பட்டது. எப்போது படப்பிடிப்பு என்ற எந்தவொரு தகவலுமே இல்லாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தங்களுடைய நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குவதற்காக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போன்று இந்நிகழ்ச்சி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கமல் தரப்பில் விசாரித்த போது, “பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மை தான். ஆனால், இன்னும் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்கள்.
மேலும், நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகளையும் சீக்கிரமாக முடித்து வெளியிட கமல் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.