2வது வரிசையில் ஸ்டாலினுக்குப் பின்புறம் கருணாநிதிக்கு உட்காரும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வருவதால் அவருக்கு சட்டசபையில் உரிய இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவருக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறி சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் லாபியில் உள்ள வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்றுவிடுவார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதால் பிரதான எதிர்கட்சியாக தி.மு.க. உள்ளது. எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் முன் வரிசையில் அமர்ந்துள்ளார். அவருக்கு அடுத்து துரைமுருகன் உள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் பின்புறம் 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைக்கு சக்கர நாற்காலி செல்லும் வகையில் சாய்வு வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
கருணாநிதி இருக்கைக்கு அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் அமர்ந்துள்ளார். கருணாநிதி இன்று அவைக்கு வராததால் அவரது இருக்கை காலியாக இருந்தது.
தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு 3-வது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
பொன்முடி, ரங்கநாதன், காந்தி, அன்பரசன், நடிகர் வாகை சந்திரசேகர், எ.வ.வேலு, மைதீன்கான் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய எம்.எல்.ஏக்களுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அகர வரிசைப்படி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஒரே வரிசையில் அமர முடியாமல் தனித்தனியே பிரிந்து உடகார்ந்து இருந்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.