வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது சென்னை ஐகோர்ட்.
.சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகளை சென்னை ஐகோர்ட் கொண்டு வந்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கு புதிய ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி புதிய ஒழுங்கு முறை விதிமுறைகளை நேற்று சென்னை ஐகோர்ட் கொண்டு வந்துள்ளது.
அதன் விவரம்:-
நீதிபதியின் பெயரில் பணம் பெற்றது கண்டறியப்பட்டால் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
ஒரு வழக்கறிஞர் நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறினால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
நீதிமன்றம் நோட்டீஸ் வழங்காமல் நடவடிக்கை எடுக்குமானால், அவர்கள் ஒழுங்குமுறை விதிகளை வழக்கறிஞர்கள் எதிர்க்கலாம்.
மது அருந்திவிட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நடமாடினால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு தடை விதிக்கப்படுவர்.
இதுபோல் மேலும் பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.