நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் கவர்னராக நியமனம். ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம்.
தமிழ்நாடு கவர்னர் கே.ரோசைய்யாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் புதிய கவர்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரியான நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராகவும், வி.பி. சிங் பத்னூர் பஞ்சாப் மாநில கவர்னராகவும், பன்வாரி லால் புரோகித் அசாம் மாநில கவர்னராகவும், ஜகதிஷ் முகி அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான சங்கரமூர்த்தியை தமிழ்நாடு கவர்னராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கர்நாடகத்திலிருந்து ஒருவரை கவர்னராக ஏற்பதில் ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லையென்றும் அதனால் சங்கரமூர்த்தியை வேண்டாமென்று ஜெயலலிதா கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் ரோசய்யாவே இன்னமும் ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தின் கவர்னராக நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
–அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.