ஆம் ஆத்மியை நெருங்கும் சித்து: கெஜ்ரிவாலுடன் திடீர் சந்திப்பு
பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த சித்துவை பிரதானப்படுத்தி ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், பா.ஜ.க.வால் அளிக்கப்பட்ட மேல்சபை எம்.பி. பதவியை துணிச்சலுடன் தூக்கி எறிந்த சித்துவின் தைரியத்தை பாராட்டுவதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
இந்த பரபரப்பாக அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் நேற்று இரவு கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சித்து சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது சித்து, ஆம் ஆத்மி கட்சியில் இணைவது குறித்து பேசியிருக்கலாம் என தெரிகிறது. இதன்மூலம் சித்து ஆம் ஆத்மியில் சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.