நாயகி மையமான படத்தை தயாரித்து நடிக்கிறார் நயன்தாரா!
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் இப்போது பிஸியாக இருக்கும் நயன்தாரா விரைவில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப்படம் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார்.
இதுகுறித்து வெளிவந்த தகவலின்படி, படத்தின் கதையைக் கேட்ட நயன்தாரா, ‘என்னுடைய சொந்த பேனரில், நாயகியை மையப்படுத்திய தமிழ்ப் படத்தை தயாரிக்கிறேன்’ என்று கூறி உள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் உருவாக உள்ள இப்படத்தில் நயன்தாரா, மாவட்ட ஆட்சியராக நடிக்கிறார். ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் ஜெகன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
நயன்தாரா நடிக்கவுள்ள வலுவான கதாபாத்திரம் என்பதைத் தாண்டி, இப்படம் குறித்த மற்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழில் விக்ரமுடன் ‘இருமுகன்’ படத்திலும், தாஸ் ராமசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஃபேன்டஸி க்ரைம் த்ரில்லர் படத்திலும், வெங்கடேஷுடன் ‘பாபு பங்காரம்’ தெலுங்குப் படத்திலும் நயன்தாரா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.