மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது – வெங்கய்ய நாயுடு கருத்து.
மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை, அவற்றில் தில்லு முல்லு செய்ய முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை கைவிட்டு விட்டு பழையபடி வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும், உ.பி. தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்- மந்திரி மாயாவதி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் கமிஷன் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், ”தங்களது தோல்வியை மூடி மறைப்பதற்காகவும், பா.ஜ.க.வின் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சி உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்கள் கூற வழி இல்லாததால், புதிய புதிய பிரச்சனைகளை தேடி கண்டுபிடித்து வருகின்றனர்” என்று கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.