மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்… அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை இப்போது நடைமுறையில் உள்ளது. அதைமாற்றி கவுன்சிலர்கள் மூலமாக தேர்வு செய்யும் மறைமுகத்தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கைவிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
நேரடித்தேர்தல் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர அமைப்புகளிலும் ஒன்றிய பெருந்தலைவர், பஞ்சாயத்து தலைவர் முதலான ஊரக அமைப்புகளிலும் நேரடித்தேர்தல் முறையே வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும் மெய்யான ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு எல்லா மட்டங்களிலும் தலைவர் பொறுப்புகளை நேரடித்தேர்தல் முறையிலேயே தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.