தேர்தல் நேரத்தில் இலவசங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவது நல்லதல்ல – தமிழக கவர்னர் ரோசையா கருத்து.
தமிழக கவர்னர் ரோசையா தெலுங்கு மாநில ஆர்ய வைசிய சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
தேர்தல் நேரத்தில் மக்களை கவர அரசியல் கட்சியினர் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதி என்கிற பெயரில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிடுகிறது. இது நல்லதல்ல.
இப்படியே போனால் எதிர் காலத்தில் அறிவிப்புக்கும், தேர்தல் வாக்குறுதிக்கும் பஞ்சம் ஏற்பட்டு விடும். எது அறிவிக்கலாம் என்ற குழப்ப நிலை ஏற்படும்.
மக்களுக்கு வழிகாட்டியாக அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் ரோசையா கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.