பிரேமலதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் – தேர்தல் கமிஷனிடம் தேமுதிக மனு.
தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நெல்லையில் நாளை தொடங்குகிறது.
அதே மாதம் 4–ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசுகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கையெழுத்திட்ட மனுவை சென்னை மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் வக்கீல் சந்தோஷ் குமார் தலைமை செயலகத்தில் மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பிரிவேஷ்குமாரை சந்தித்து அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:–
கடந்த முறை நடந்த தே.மு.தி.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பிரேமலதா பங்கேற்றபோது அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலில் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.