ரகுராம் ராஜனைக் காலி பண்ணியாகிவிட்டது. என்னுடைய அடுத்த குறி அர்விந்த் கேஜ்ரிவால்தான்- சுப்பிரமணிய சாமி சொல்கிறார்.
டெல்லியில் பா.ஜ.க. எம்.பி. மகேஷ் கிரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். டெல்லி மாநகராட்சி ஊழியர் எம்.எம். கான் கொலையில் தன்னை குற்றம் சாட்டியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகேஷ் கிரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பா.ஜ.க. எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி, “தனது வாழ்க்கை முழுவதும் கெஜ்ரிவால் செய்த ஒரே வேலை மோசடி மட்டும் தான். தன்னை ஐ.ஐ.டி.-யின் மெச்சத்தக்க மாணவர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவர் எப்படி ஐ.ஐ.டி.-யில் சேர்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவேன்.
இதுவரை நான் ரகுராம் ராஜனை விரட்டிக்கொண்டிருந்தேன். அவர் இப்போது போய்விட்டார். இனி என் கவனம் கெஜ்ரிவாலை வெளிப்படுத்துவதில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.