குஜராத்தின் உனாவில் தாக்கப்பட்ட தலித்துகளை சந்தித்த ராகுல் காந்தி, இதுதான் குஜராத் மாடலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக, 4 தலித் இளைஞர்களை சிலர் கடுமையாக தாக்கினர். இதில் பாதிக்கப்பட்ட நபர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார்.
இதன் பின்னர் செய்தியளார்களை சந்தித்த ராகுல் “ பலமில்லாத மக்கள் சமூகம் நசுக்கப்படுகிறது. குஜராத் மாடல் பற்றி மோடி பேசுகிறார். ஆனால் கல்வி கேட்பவர்கள், அவர்களின் கொள்கைகளை நம்பாதவர்கள், கார்பரேட் எதிராக பேசுபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றனர். குஜராத் மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்று 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கூறுவதை கேட்கும் போது வேதனையாக உள்ளது.
இது இரண்டு கொள்கைகளுக்கு எதிராக நடக்கும் போர். காந்தி, நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகள் ஒருபுறம், ஆர்.எஸ்.எஸ்., மோடியின் கொள்கைகள் புறமும் உள்ளது” என்று தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.