காஷ்மீர் வன்முறை: பெல்லட் துப்பாக்கியால் பாதித்தவர்களை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல்காந்தி
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட நாள் முதலாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக 45 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது கூட்டத்தை கலைக்க இராணுவத்தினரால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. கூட்டத்தைக் கலைப்பத்தற்காக பயன்படுத்தப்படும் அபாயம் அல்லாத ஆயுதப் பட்டியலில் உள்ள ஒருவகை உபகரணம். உலகம் முழுவதும் இத்துப்பாக்கி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
வன்முறை சம்பவங்களின் போது பெல்லட் துப்பாக்கியின் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று சந்தித்தார்.
மாலை 4.30 மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார். சுமார் அரைமணி நேரம் அவர் செலவிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.