பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் ரெய்டு; அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி.
புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் ரங்கசாமி தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நாளையுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் ரங்கசாமி வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தட்டான்சாவடியில் உள்ள ரங்கசாமி வீட்டிற்குள் இன்று மதியம் 1.50 மணிக்கு 5 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நுழைந்தனர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அறைகள், மாடியில் அதிகாரிகள் சல்லடைப்போட்டு சோதனை நடத்தினர். சுமார் 10 நிமிடங்களே நடந்த இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.
முதல்வர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
முதல்வர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.