சுப்பிரமணிய சாமியுடன் அமித் ஷா மோதல்; மும்பை கல்லூரியில் சாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து.
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் மும்பை நிகழ்ச்சி திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித் ஷாவின் அறிவுறுத்தல் பெயரில்தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பல்வேறு சர்ச்சை கூறிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது கடும் குற்றசாட்டுகளை கூறிவந்த அவர், பின்னர் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீதும், நிதி மந்திரி அருண் ஜெட்லி மீதும் தனது கவனத்தை திருப்பினார்.
குறிப்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லி பற்றி சாமியின் கருத்துகள் கட்சியின் மேலிடத்தை சங்கடத்திகுள்ளாக்கியது. இந்நிலையில் சாமி நேற்று மும்பையின் கே.சி. கல்லுரியில் அவரசநிலை காலம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவிருந்தார்.
ஆனால் இந்த நிகழ்ச்சி திடீர் என ரத்து செய்யப்பட்டது. கட்சி தலைவர் அமித் ஷாவின் அறிவுறுத்தல் பெயரில்தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சர்ச்சைகுரிய கருத்துகளை சுப்பிரமணிய சாமி வெளியிடலாம் என்பதால்தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தேசிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.