சென்னை சிறுவர்கள் ஜெயிலில் மோதல் கலவரம் ; 20 சிறுவர்கள் தப்பி ஓட்டம்.
சென்னை கெல்லீசில் அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. 18 வயதுக்கு கீழ்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு உள்ளனர்.
நேற்று இரவு 20 சிறுவர்கள் ஜெயிலில் இருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது மற்றொரு தரப்பினர் அவர்களை தடுத்தனர். இதனால் 2 தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினார்கள். அந்த பகுதியே கலவரம் போல் காணப்பட்டது. பின்னர் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் 20 சிறுவர்களும் மொட்டை மாடிக்கு சென்று வார்டனுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினார்கள். திடீரென்று அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் அயனாவரம் உதவி கமிஷனர் சங்கரன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.