விஜய் மல்லையாவுக்கு வழங்கிய கடன்கள் எவ்வளவு? வங்கிகளிடம் விசாரணை அமைப்பு கேள்வி
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை கோர்ட்டு அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவித்தது. மார்ச் 2-ந் தேதி லண்டன் சென்ற விஜய் மல்லையாவை இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின்னரும், இங்கிலாந்து அரசு திருப்பி அனுப்ப மறுத்துவிட்டது.
டெல்லி மேல்-சபையில் விஜய் மல்லையா மீது கடுமையான மோசடி விசாரணை அமைப்பு விசாரித்து வருவதாக கம்பெனிகள் விவகாரத்துறை மந்திரி அருண் ஜெட்லி கூறினார். மும்பையில் உள்ள அந்த விசாரணை அமைப்பு, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கிகளிடம் எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது? இதில் அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதன்படி அந்த விவரங்களை கொடுத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.