பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிரட்டும் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற அப்ரிடி 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.
20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை.
இந்த நிலையில் தனியார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:–
அணியில் உள்ள சில வீரர்களை விட நான் விளையாடுவதாக உணர்ந்தேன். இதனால் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற வில்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பதை ஓய்வு பெற்ற பிறகு வெளியிடுவேன்.
கிரிக்கெட் நிர்வாகம் நிறைய தவறுகள் செய்துள்ளது. வீரர்கள் தரம் சர்வதேச அளவில் இல்லை. ஓய்வுக்கு பிறகு ரகசியங்களை தெரிவிப்பேன் என்றார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.