கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு மனு
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 2002-ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றபோது நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான்கான் காரை தனது டிரைவர் தான் ஓட்டினார் என்றும் அப்போது தான் மது போதையில் இல்லை என்றும் கூறினார்.
இந்த வழக்கில் மும்பை செசன்சு கோர்ட்டு நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று அறிவித்தது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். செசன்சு கோர்ட்டு அவருக்கு தண்டனை விதித்த அதே நாளில், ஐகோர்ட்டு சாட்சியம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மராட்டிய மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.