செல்வராகவன் – சூர்யா இணையும் படப்பணிகள் தொடக்கம்: பொங்கல் முதல் படப்பிடிப்பு
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தின் பணிகள் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. ‘சூர்யா 36’ படத்தை சிவகுமார் தொடங்கி வைத்தார். இப்பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பொங்கல் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.