தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி நடைபெறும்; மாநிலத் தேர்தல் கமிஷனர் சீதாராமன் அறிவிப்பு.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது அடுத்த மாதம் 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறித்தார்.
இதுகுறித்து மேலும் சீதாராமன் கூறுகையில் ‘‘தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையில் இருந்து தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 3-ந்தேதியாகும். மனு மீதான பரிசீலனை 4-ந்தேதியும், வேட்புமனு திரும்பபெறுதலுக்கான கடைசி தேதி 6-ந்தேதியாகும்.
17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 24-ந்தேதிக்குள் அனைத்து நேர்முக தேர்தல் நடைபெற்று முடிந்துவிட வேண்டும். வெற்றி பெற்றவர்களின் பதவி ஏற்பு மற்றும் முதல் கூட்டம் 26-ந்தேதி நடைபெறும்.
மேயர் போன்ற மறைமுக பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் 2-ந்தேதி நடைபெறும்’’ என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.