ரஜினி ஒரு அற்புதமான மனிதர் ; அவரைப் போன்று யாருமே இல்லை – கபாலி கதாநாயகி ராதிகா ஆப்தே புகழாரம்.
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங்கில் கலந்துகொண்ட ரஜினி, தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். அதன்பிறகு, மற்ற நடிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டப்பிங் பணிகளோடு, டீசர் தயார் செய்யும் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உழைப்பாளர்கள் தினமான மே 1-ந் தேதி கபாலி படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, ‘ரஜினிகாந்தைப் போல் யாருமே இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார்.
ராதிகா ஆப்தே நடிப்பில் தயாராகியுள்ள ‘போபியா’ இந்திப் படத்தின் டிரைலர் நேற்று மாலை மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரிடம் ‘கபாலி’ படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, ‘ரஜினி சாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய உயர்ந்த தருணமாக இருந்தது. குறிப்பாக மலேசியாவில் நடந்த படப்பிடிப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் நடித்தது எனது வாழ்வின் மிகவும் சிறந்த அனுபமாகும்.
ரஜினி சார் மிகவும் அற்புதமான மனிதர், அவரைப்போல் யாருமே இல்லை’ என தெரிவித்தார். இந்தப் படத்தில் ரஜினியுடன் நீங்களும் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ‘இருக்கலாம்… பார்க்கத்தானே போகிறீர்கள்?’ என்று ராதிகா ஆப்தே கூறினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.