விஜயகாந்துக்கு எதிராக செயல்படுவதால் கொலை மிரட்டல் வருகிறது: சந்திரகுமார்
விஜயகாந்துக்கு எதிராக செயல்படுவதால் தங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, விஜயகாந்துக்கு எதிராக செயல்பட்டு வருதால் தங்களை கொலை செய்துவிடுவதாக சாதி பெயரை சொல்லி சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.