சாரதா சிட் பண்டில் கைது செய்யப்பட்ட திருணமூல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ் பரோலில் விடுதலை.
உச்சக்கட்டமாக அக்கட்சியின் எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன்பின் பலமுறை கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பத்தார். ஆனால், கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி குணால் தாயாருக்கு உடல்நலம் குன்றியது. இதனால் அவர் மொளலாலி உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘‘தற்போது அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. மௌலாலி நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து உடல் நலம் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று நேற்று தலைமை குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரபிந்தா மித்ரா அவருக்கு பரோல் அளித்து அனுமதி அளித்தார். நீதிபதி இரண்டு மணி நேரம் பரோல் அளித்ததால் இன்று அவர் தனது தாயாரை பார்த்து விட்டு பின்னர் ஜெயிலுக்கு திரும்புவார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.